Sunday, April 10, 2011

முஸ்லிம் அநாதைகள்

அறிவிப்பாளர் : ஸஹ்ல் பின் ஸஅத்َضِيَ اللَّهُ عَنْهُ
நபி 
صلى الله عليه وسلم அவர்கள் அறிவித்தார்கள்:
“நானும் – அநாதையைப் பராமரிப்பவனும், மற்ற தேவைகள் உடையோரைப் பராமாரிப்பவனும் சுவனத்தில் இப்படி இருப்போம். இதைச் சொல்லிவிட்டு அண்ணலார் நடுவிரலையும், சுட்டுவிரலையும் காட்டினார்கள். இரு விரல்களுக்கிடையேயும் சிறிது இடைவெளி விட்டிருந்தார்கள். (புகாரி)

அறிவிப்பாளர் : அபூஹுரைராَضِيَ اللَّهُ عَنْهُ
நபி 
صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:
“எந்த வீட்டில் ஒர் அநாதை இருந்து, அவனுடன் நல்லவிதமாக நடந்துகொள்ளப்படுகின்றதோ அந்த வீடே முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகச் சிறந்த வீடாகும். எந்த வீட்டில் ஓர் அநாதை இருந்து, அவனுடன் கோபமாக நடந்து கொள்ளப்படுகின்றதோ அந்த வீடுதான் முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகக் கெட்ட வீடாகும். (இப்னு மாஜா)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْهُ
ஒரு மனிதர் நபி 
صلى الله عليه وسلم அவர்கள் தன் கல்நெஞ்சம் பற்றி முறையிட்டார். அண்ணலார், “அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள், ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்!” என்று கூறினார்கள். (மிஷ்காத்)
அறிவிப்பாளர் : குவைலித் பின் உமர் َضِيَ اللَّهُ عَنْهُ
நபி 
صلى الله عليه وسلم அவர்கள் “என் இறைவா! நான் இரு பலவீனர்களின் உரிமையை கண்ணியத்திற்குரியதாய்க் கருதுகின்றேன்: 1. அநாதையின் உரிமை 2. மனைவியின் உரிமை.” (நஸயீ)
அறிவிப்பாளர் : ஜாபிர் َضِيَ اللَّهُ عَنْهُ
நபி 
صلى الله عليه وسلم அவர்கள் வினவினேன்: “என் பராமாரிப்பில் இருக்கும் அநாதையை எந்தெந்த காரணங்களுக்காக நான் அடிக்கலாம்?” அண்ணலார் கூறினார்கள்: “எந்தக் காரணங்களுக்காக உம் சொந்தக் குழந்தைகளை அடிப்பீரோ அந்தக் காரணங்களுக்காக மட்டுமே அவர்களை நீர் அடிக்கலாம். எச்சரிக்கை! உம் செல்வததைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அநாதையின் செல்வத்தை அழிக்கக் கூடாது. அநாதையின் செல்வத்தால் உம் சொத்தைப் பெருக்கிக் கொள்கக்கூடாது.” (முஃஜம் தபரானீ)

No comments:

Post a Comment